திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு முதுநிலை பாட பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை நடைபெறுகிறது. எம்.ஏ (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல்), எம்எஸ்சி (கணிதம், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்) ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை காலை 9 மணி முதல் 12 மணி வரை  நடைபெறுகிறது.