திருவண்ணாமலை மாவட்டம் ஜூலை – 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை இன்று (21.07.2023) காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க உள்ளனர்.

எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும் தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.