கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன மழையின் காரணமாக கே.ஆர்.பி அணையில் வரும் நீரானது அதிகரித்து உள்ளதால் அணையை பாதுகாப்பு கருதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.