திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் இன்று முதல் தொடங்குவதை முன்னிட்டு மூன்றாம் பிரகாரத்தில் சம்பந்த விநாயகர் முன்பு நேற்று மாலை 5 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டது.

இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் இந்த வசந்த உற்சவ காலத்தில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் தனி வாகனத்தில் கோவில் மூன்றாம் பிரகாரத்தில், இரவு பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளி தல விருட்சமான மகிழ மரத்தை 10 முறை வலம் வருவார்.